“அடுத்தது யார்”..? நடிகை யாஷிகா ஆனந்தை சீண்டும் நெட்டிசன்கள்.. அதிருப்தியில் ரசிகர்கள்..

By Archana

Updated on:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த் இந்த படம் ஓரளவுக்கு வெற்றி அடைந்ததால் இதை அடுத்து சில படங்களில் நடித்தார் ஆனால் அந்த படமானது நினைத்த அளவிற்கு இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை ,அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ,அதில் இவருக்கு என்று ஒரு சிறிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார் ,

   

இதை அடுத்தும் இவருக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வில்லை ,ஆனால் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் அவ்வப்போது சிறு சிறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர் மக்களை கவர்ந்து வந்தார் ,சில மாதங்களுக்கு முன் இவர் நண்பர்களோடு சேர்ந்து சொகுசு காரில் ஊர் சுற்றிய போது விபத்து ஒன்று ஏற்பட்டது ,

இதில் யாஷிகாவின் நண்பர் ஒருவர் இறந்து விட்டார் ,அதில் இவருக்கு ஒரு சில இடத்தில் காயம் ஏற்பட்டது ,எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிபட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதை அடிக்கடி ரீலிஸ் செய்து பதிவிட்டு வருகிறார் ,இதனால் இவரை ஆன்லைனில் பின்தொடர்ந்து வருபவர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர் ..,

author avatar
Archana