தனது தாய் உயிரைக் காப்பாற்ற….. தன் உயிரையும் மதிக்காமல் தைரியமாக செயல்பட்ட சிறு குழந்தை…. வைரலாகும் வீடியோ..

By Archana

Updated on:

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அனைவரும் மிகவும் தைரியமாக எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடியவர்களாக வளர்ந்து வருகிறார்கள் , பொதுவாக பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து அவர்களை பாதுகாத்து வளர்ப்பார்கள்.

   

அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துடித்துப் போவது தாய் தான். அந்த அளவுக்கு தன் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து வருவார்கள். ஆனால் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண்மணி கேரேராஜ்க்கு கதவை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த ஏணியானது கீழே விழுந்துவிட்டது.

இதனால் அவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தன் தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துணிச்சலாக அந்த ஏணியை தூக்க முடியாமல் தூக்கி நிமிர்த்தி வைக்கின்றான். அந்தத் தாய் நீ தூக்க வேண்டாம் விட்டுவிடு என்று கூறியபோதிலும் அதைக் கேட்காமல் தன் தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவன் முயற்சி செய்கிறான். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana