கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற தொற்று உலகம் முழுவதையும் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் தங்களது பாதுகாப்பை மிகவும் முக்கியமாக எண்ணினார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
தற்போது தான் தொற்று குறைந்து மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சைனாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் தங்கள் மிகவும் அழகாக பாதுகாத்துள்ளனர். அவர்கள் இருவரும் குடையின் மீது கவர் போன்ற ஒரு அமைப்பை வைத்து அதற்குள் இருவரும் இருக்கின்றனர்.
ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் அந்தக் கவரை சிறிதளவு ஓப்பன் செய்து அதன் மூலம் வாங்கிக் கொண்ட பின்னர் மீண்டும் மூடி கொள்கின்றனர். இதன் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்களை அப்பகுதியில் இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்.
A Chinese couple takes self-protection to another level… pic.twitter.com/ovPlIaAeZg
— People’s Daily, China (@PDChina) December 22, 2022