ஒரு இளைஞர் தேங்காய் ஓடை வைத்து அழகான ஒரு குடுவையை உருவாக்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம்தோறும் பல வீடியோக்கள் வெளியாகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். சமூக வலைதளங்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
தாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அதில் பகிர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் அந்த இளைஞர்களின் திறமைகளும் வெளிப்படுகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நாம் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தேங்காய் ஓட்டை வைத்து ஒரு குடுவையை இளைஞன் அழகாக செய்கிறார்.
முதலில் அந்த தேங்காய் ஓட்டின் மேல் இருக்கும் நார் பகுதியை ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு முழுவதாக தேய்த்து விடுகிறார். பின்னர் அதனை ரம்பம் கொண்டு எந்த ஷேப்பிற்கு வேண்டுமோ அந்த ஷேப்புக்கு அதனை அழகாக வெட்டி கொள்கிறார். பின்னர் முழுவதுமாக தயார் செய்த பின் பார்த்தால் அழகான குடுவை ஒன்று உருவாகியுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் சூப்பராக இருந்தது.
View this post on Instagram