தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , இவர் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார் , இவரின் மவுசு இன்று வரையில் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அழகிய ஜோடி தான் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா, இவர்கள் தான். மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்து முடிக்கும் முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா அவர்களை அதிகமாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை.
ஆனால் ஒரு சில படங்களில் சின்ன கேமியோ செய்து வருகின்றார் , அதுமட்டும் இல்லாமல் சின்ன திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் , சமீபத்தில் இவர் தனது கணவர் மற்றும் மகனோடு சேர்ந்து திருமலை கோவிலுக்கு சென்றுள்ளனர் அங்கு ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது .,