இந்த பெரிய மனுஷன் செய்யுற வேலைய பாருங்க… மிஷின் சப்தம் மட்டும் வேற லெவல்… .வைரலாகும் வீடியோ!

By Archana

Published on:

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

   

 

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். பொதுவாகவே குழந்தைகள் எதையும் தானாக செய்வது இல்லை. யாரையேனும் பார்த்தே அதே போலச் செய்கிறது. அந்தவகையில் இங்கேயும் ஒரு குழந்தை ஒன்றை பார்த்து செய்கிறது. அது நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

அதாவது குழந்தையின் வீட்டை சுற்றி மரம் அறுக்கும் மிஷினால் மரத்தை துண்டு, துண்டுகளாக வெட்டுகின்றனர். அதைப் பார்த்த குழந்தை அதேபோல் தானும் மிஷின் போல் ஒரு பலகையையும், கேன் டப்பாவையையும் சேர்த்து வைத்துக்கொண்டு மரத்தில் போய் அறுக்கிறது. கூடவே அந்த மிஷின் போலவே வாயாலேயே சப்தமும் எழுப்புகிறது. குறித்த இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana