இதுவரை யாரும் இப்படி பர்த்டே கொண்டாடிருக்க மாட்டாங்க…. வினோதமாக வனிதா செய்த செயல்…. வைரல் புகைப்படம்….!!!!

By Archana

Published on:

வனிதா விஜயகுமார். இவர் “சந்திரலேகா” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் . அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டடு தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை திறந்து உள்ளார். இதனிடையே அக்டோபர் 5-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பாங்காங் சென்று இருந்தால் வனிதா அங்கு தனது பிறந்த நாளை யாரும் கொண்டாடாத வகையில் வினோதமாக கொண்டாடியுள்ளார்.

author avatar
Archana