சத்துணவு ஆசிரியர் ஒருவர் தங்கள் குழந்தைகளுக்கு பாட்டு பாடி தூங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மூன்று வயதில் இருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு ஆடல், பாடல் மூலமாக புகைப்படங்கள் மூலமாக ஆரம்பகால கல்வியை போதித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நல்லொழுக்கம், பேசுவது, பழக்க வழக்கங்கள் போன்ற சில நற்குணங்களையும் கற்பித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான காய்கறி உணவுகளும் முட்டைகளும் வழங்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏற்றவாறு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் குழந்தைகளாக மாறி அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.
தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்கள் செய்யும் செயல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஒரு ஆசிரியர் குழந்தைகளை தூங்க வைப்பதற்கு முயற்சி செய்கிறார். இதனால் பாடல் போட்டு அந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடி காட்டுகிறார். இதனால் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.