பட்டிமன்ற பிரபலம் திண்டுக்கல் லியோனியின் மகனா இது? ஹீரோ இவர் தானாம்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

By Archana

Published on:

திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்.

   

கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் லியோனி. பல மேடை நிகழ்ச்சிகளில் பேசி வந்தவர் திமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பல காலமாக இருந்து வருகிறது.

ஆளும் கட்சியினரை விமர்சிப்பதும், கேலி கிண்டல் செய்வதும் அவரின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெறும் விசயம். தற்போது அவரின் மகன் லியோ சிவக்குமார் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறாராம்.

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறாராம். ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. ஃபிப்ரவரி 15 ல் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாம்.

இதில் லியோனியின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

author avatar
Archana