பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்திற்கு ஒன்றாகச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த காதலர்களில், இறுதி நேரத்தில் நேர்ந்த விபரீத திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலில் இணைந்த இருவரும் உலகை விட்டு ஒன்றாகப் பிரியப் போவதாகச் சபதம் செய்துகொண்டு பாலத்தின் விளிம்பிற்கு வந்துள்ளனர். இறுதி நொடியில், மாற்றுச் சிந்தனையின்றி காதலன் முதலில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவன் ஆழமான தண்ணீரில் விழுவதைக் கண்ட காதலிக்கு, அடுத்த கணமே மரண பயம் வந்து தைரியம் இழந்ததால், சபதத்தை மறந்துவிட்டு அங்கிருந்து உயிரைப் பிழைக்க ஓட்டம் பிடித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, ஆற்றில் குதித்த வாலிபரை அங்கிருந்த மீட்புப் படையினரும், உள்ளூர் நீச்சல் வீரர்களும் துரிதமாகச் செயல்பட்டு ஆற்று வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டனர். தற்போது அந்த வாலிபர் எவ்வித ஆபத்துமின்றி முழுமையான உடல் நலத்துடன் காப்பற்றப்பட்டுள்ளார். ஒன்றாகச் சாகத் துணிந்த காதலியே தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாதியிலேயே ஓடிவிட்ட இந்தச் சம்பவம், இன்றைய காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
