என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும்.
அதிலும் தன் தங்கையோ, அக்காவோ கல்யாண்ம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும்போது சகோதரர்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிடுகிறார்கள். அலங்காரம் செய்துகொண்ட மணப்பெண்கள் என்பதைத் தாண்டி மணப்பெண்களும் கதறி அழுதுவிடுகின்றனர்.
அந்தவகையில் பல்வேறு திருமணங்களில் நடந்த அண்ணன்_தங்கை செண்டிமெண்ட் வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இதில் திருமணம் முடிந்து முதன்முதலில் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் மணமகள் கண்கலங்க, அவர்களின் சகோதரர்களும் கண்ணீர் விடுகின்றனர். இதைப் பார்க்கவே பாசத்தின் அருமை, பெருமைகளை உணர்த்துவதாக உள்ளது. இதோ அந்த வீடியோ…