கடை திறப்பு விழாவிற்கு சென்ற குக் வித் கோ மாளி புகழ்.. அடுத்த சில மணிநேரத்திலேயே சீல் வைத்த அதிகாரிகள்!

By Archana

Published on:

குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் புகழ்.இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் ஒப்பந்தமாகி கலக்கிகொண்டு இருக்கிறார்.

   

இந்நிலையில், சமீபத்தில் நெல்லை மாவட்டம் வண்ணாரபேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக புகழ் சென்றுள்ளார்.

அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் பலர் புகழுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் முயன்றனர்.ஆனால், அங்கிருந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசம் அணியாமலும் கூடியிருந்தனர்.

இதனால், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு கொ ரோனா விதிகளை மீ றியதாக கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அ பராதமும் விதித்தனர். புதிய செல்போன் கடை திறப்பு விழா அன்றே கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், கடையின் உரிமையாளர்கள் சோகத்தில் மூ ழ்கியுள்ளனர்.

author avatar
Archana