ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இளைஞருக்கு ஏற்பட்ட அவலம் !!

By Archana

Published on:

ஊரடங்கைமீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு தர்மஅ.டி கொடுத்த போலீஸ்.

ஆந்திராவில், பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடப்பாவில் கடந்த 25 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ஜீவன் ரெட்டி,

   

ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடிக்க முயற்சித்தார்.

ஆனால் போலீசாரை கண்டதும் வண்டியை அவசரமாக திருப்பி சென்ற இளைஞர், தவறி கீழே விழுந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூவன் ரெட்டி, இளைஞரை வெளுத்துவாங்கிய சிசிசிவி காட்சிகள் வைரலானதையடுத்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
Archana